Tuesday, September 23, 2014

சண்டி ஹோமம்

கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் கழித்து நம் மடத்தில் மீண்டும் சண்டி ஹோமம் நடைபெற்றது. வெறும் செவி வழிச் செய்திகள் மூலமாகவே சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வந்திருந்தனர். ஹோமத்தின் சிறப்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் நம் மடத்தின் முறைகார தீக்ஷிதர் தெய்வ சங்கல்பமாக வந்திருந்தார். அவர் வந்தது அந்த நடராஜ மூர்த்தியும் சிவகாமியம்பாளும் பூஜைகளை ஏற்றுக் கொண்டது போல அற்புதமாக இருந்தது. விழா ஏற்பாடுகளை இளைஞர்கள் பெருந்திரளாக இருந்து கவனித்துக் கொண்டனர்.

குமாரமங்கலம், மொடக்குறிச்சி, வெங்கம்பூர் தூர கோத்திரத்தார் தலைமையில் ஹோம ஏற்பாடுகள் நடந்தது. ஆனங்கூர் கன்னன், மண்டபத்தூர் கன்னன், மோரூர் கன்னன், மல்லை விழியன், வெண்ணந்தூர் காட கூட்டத்தார் மற்றும் பல சிஷ்ய பரம்பரையினர் கலந்துகொண்டு குருப்பிரசாதம் பெற்றனர்.